mercredi 27 février 2013

15 Rules That India Lives by



 
15 Rules That India Lives by.....

1. The Other Side Law:
  If my side of the road has a traffic jam , then I can start driving on
the wrong side of the road, and all incoming cars will be rerouted via Meerut
.

2. The No Queue Rule:
If there is a queue of many people, no one will notice me sneaking into the front as long as I am looking the other way.

3. The Mind Over Matter Law:
If a red light is not working, four cars from different directions can easily pass through one another..

4. The Auto Axiom:
If I indicate which way I am going to turn my vehicle, it is an information security leak.
 
5. The In Spit Of Thing:
The more I lean out of my car or bus, and the harder I spit, the stronger the roads become.

6. The Cinema Hall Fact:
If I get a call on my mobile phone, the film automatically goes into pause mode.

7. The Brotherhood Law:
If I want to win an argument, I need only to repeatedly suggest to the other person that I have illicit relations with his sister.

8. The Baraat/ Marriage Right:
When I'm on the road to marriage, all the roads in the city belong to me. To ME.

9. The Heart Of Things:
If I open enough buttons on my shirt, the pretty girl at the bus stop can see through my mal-formed chest into the depths of my soul.
 
10. The Name Game:
It is very important for the driver behind me to memorize the nicknames of my children.
 
11. Parking Up The Wrong Tree:
  When I double-park my car, the road automatically widens so that the traffic is not affected.
 
12. The Chill Bill Move:
When I park and block someone else's car I am giving him a chance to pause, relax, chill and take a few moments off from his rushed day.

13. The Ogling Stare:
If you don't ogle and drool at every hot Chick that passes by, you're gay.
 
14. The Bus Law:
If I stop my bus at the correct place near the bus stop, the city will explode and blow into 6 million pieces.

15. The VIP Rule:
There are only 3 important persons in this city -Me, I, Myself!

mardi 26 février 2013

சமையல்:முந்திரி முறுக்கு


Diwali Special: Cashew Murukku - Cooking Recipes in Tamil

தேவையான பொருள்கள்:
பதப்படுத்திய பச்சை அரிசிமாவு - 1/2 கிலோ
முந்திரி பருப்பு - 100 கிராம்
நெய் - 3 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:
* முந்திரி பருப்பை பத்து நிமிடம் ஊற வைத்து விழுதாக அரைத்து கொள்ளவும்.
* பச்சரிசி மாவுடன் உருக்கிய நெய், உப்பு, விழுது சிறிது நீர் சேர்த்து முறுக்கு மாவு பதத்திற்கு கெட்டியாக பிசைந்து முறுக்கு அச்சில் பிழிந்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

* சுவையான சத்தான முறுக்கு ரெடி.


கூடல் - Monday, October 24, 2011

சமையல்:ஓட்ஸ் பொங்கல்


Oats Pongal - Cooking Recipes in Tamil

பொங்கலுக்கு எல்லோரும் வழக்கமா சர்க்கரை பொங்கல்தான் வைப்போம்.. அதோடு இந்த ஓட்ஸ் பொங்கலையும் வச்சு பாருங்க.. முற்றிலும் மாறுபட்ட சுவையுடன் சூப்பரா இருக்கும்... அப்பறம் என்ன? ஒரே பாராட்டு மழைதான்......!

தேவையானப் பொருள்கள்:
ஓட்ஸ் - 2 கப்
பச்சைப் பருப்பு - 3/4 கப்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

தாளிக்க:
நெய் - 2 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் 1 - டீஸ்பூன்
முந்திரி பருப்பு - 10
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
கறிவேப்பிலை - கொஞ்சம்

செய்முறை:
* முதலில் வெறும் வாணலியில் பச்சைப் பருப்பை வாசம் வர வறுத்துக் கொள்ளவும்.
* பிறகு குக்கரில் (அ) ஒரு பாத்திரத்தில் பருப்பு வேகும் அளவு தண்ணீர் ஊற்றி, மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
* பருப்பு முக்கால் பதம் வெந்ததும் அதில் ஒரு பங்கு ஓட்ஸூக்கு இரண்டரை பங்கு தண்ணீ­ர் என 5 கப் தண்­ர் ஊற்றி கொதி நிலை வரும் வரை மூடி வைக்கவும்.
* கொதி வந்ததும் ஓட்ஸைப் போட்டு, தேவையான உப்பும் சேர்த்து நன்றாகக் கிளறிவிட்டு மூடி வைக்கவும்.
* இரண்டும் நன்றாகக் குழைந்து, வேகும் வரை மிதமானத் தீயில் வைத்திருக்கவும்.
* ஒரு வாணலியில் நெய் விட்டு சூடுபடுத்தவும்.
* அதில் மிளகு(ஒன்றிரண்டாகப் பொடித்து), சீரகம், இஞ்சி, முந்திரி, கறிவேப்பிலை தாளித்து பொங்கலில் சேர்த்து கிளறி இறக்கவும்.
* அல்லது தாளித்த பிறகு பொங்கலை வாணலியில் சேர்த்து கிளறி இறக்கவும். இந்த முறையில் செய்யும்பொழுது மிகவும் நன்றாக இருக்கும்.
* இதற்கு தேங்காய் சட்னி, சாம்பார் இவை மிகப் பொருத்தமாக இருக்கும்.


குறிப்பு: சாதாரண பொங்கல் போல் அல்லாமல் ஓட்ஸ் பொங்கல் செய்யும்போது பச்சைப் பருப்பின் அளவைக் கொஞ்சம் கூட்டி செய்தால்தான் நன்றாக இருக்கும்

கூடல் - Saturday, January 14, 2012

dimanche 24 février 2013

டிப்ஸ்

டிப்ஸ்:புளிக்க.... பொரிக்க.... சுவைக்க...


Kitchen Tips - Tips for Women
* வடை, முறுக்கு போன்ற பலகாரங்கள் செய்யும்போது எண்ணெயில் முதலில் கொய்யா இலையைப் போட்டு வறுத்து எடுங்கள். பிறகு, பலகாரங்கள் செய்து பாருங்கள். எண்ணெய் பொங்காது.
* ஒரே ஒரு துண்டு புடலங்காய் கிடந்தது. கறி சமைக்கக் காணாது என்பதால். அதைப் பொடியாக நறுக்கி வதக்கினேன். அத்துடன் 4 மிளகாய், சிறிது கடுகு வறுத்து உப்பு, புளி சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றினேன். ஆஹா.... துவையல் பிரமாதம்!
* குழாயில் பிடித்த தண்ணீர் கலங்கலாக இருக்கிறதா? ஒரு பக்கெட் தண்ணீருக்கு கால் டீஸ்பூன் துவரம் பருப்பை நைஸாக அரைத்து கலக்கினால் அது தெளிந்து விடும். சுவையும் மாறாது.
* குளிர்காலத்தில் இட்லி மாவு புளிக்காமல் இருந்தால், மாவைக் கரைக்கும்போது ஒரு சிறு சாஷே "ஈனோ" சேருங்கள். மாவு நன்கு புளிக்கும். இட்லியும் மிருதுவாக இருக்கும்.
* வாங்கி வந்த காய்கறி, கீரை வகைகள் வாடி வதங்கி இருக்கிறதா? அவற்றை எலுமிச்சம் பழச்சாறு கலந்த தண்ணீரில் அரை மணி நேரம் போட்டு எடுங்கள். அப்போதுதான் வாங்கியதுபோல ஃப்ரெஷ்ஷாக மாறிவிடும்.
* பிரியாணி இலையை, அலமாரிகளிலும், அடுப்படியிலும் போட்டு வையுங்கள். கரப்பான் பூச்சிகள் பக்கத்திலேயே நெருங்காது.
* வாழைக்காயைத் தோல் சிவி, சிப்ஸ் கட்டையில் சீவிய பிறகு, சூடான நீரில் சிறிது மஞ்சள் பொடியும், உப்பும் போட்டு சீவிய வாழைக்காயையும் கொட்டி மூன்று நிமிடம் மூடி வைக்கவும். பிறகு நீரை வடித்து வாழைக்காயைப் பிழிந்து முறத்தில் உதிர்த்து ஐந்து நிமிடம் உலரவிட்டபின் சிப்ஸ் செய்தால், வாழை சிப்ஸ் மொறுமொறுப்பாய் வருவதோடு சிக்கிரம் வெந்துவிடும். நேரமும் மிச்சமாகும்.
* பரோட்டா அல்லது நாண் செய்ய மாவு பிசையும்போது. குடிக்கிற சோடாவை தண்ணீருக்கு பதிலாக ஊற்றி பிசைந்து பாருங்கள்... பரோட்டா மிருதுவாக, பஞ்சுபோல மெத்து மெத்தென்று வரும்.

முதலாளித்துவத்தின் முடிவு


Embarking of Globalization - Tamil Economics Articles மேனார்டு கீன்ஸ், ஜோசப் ஷூம்பீட்டர் ஆகிய இரண்டு பொருளியலார்களும் முதலாளித்துவம் இருப்பதற்கான அறிவுபூர்வ காரணத்தை நிலைநாட்டப் பெருமுயற்சி எடுத்துக் கொண்டனர். முதல் உலகப் போர், பொருளாதாரப் பெருமந்தம், இரண்டாம் உலகப் போர் ஆகியவற்றால் வரலாறு காணாத வகையில் முதலாளித்துவத்திற்குச் சிக்கல் ஏற்பட்டபோது, இவர்கள் இருவரும் அதற்கு விளக்கம் கூறினர். சோவியத் யூனியனில் சோசலிச அமைப்பு உருவாகி வந்த நிலையில் இரண்டாம் உலகப் போருக்குப் பின், சிந்தாந்த பொருளாதார ரீதியாகத் தன்னை மீண்டும் நிலை நிறுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயம் முதலாளித்துவத்திற்கு ஏற்பட்டது. சித்தாந்தத் தேவைகளைப் பொருத்தவரையில் கீன்ஸ், ஷூம்பீட்டர் ஆகிய இருவரும் மிகத் திறமையாக அதனைச் செய்தனர். அவர்களிருவரும் முதலாளித்துவப் பொருளாதார கருத்தமைவுகளில் சிறந்தவற்றை எடுத்துரைத்தவர்கள் மட்டுமல்ல, முதலாளித்துவப் பொருளாதார விஞ்ஞானத்தின் தலைசிறந்த பிரமுகர்களும் ஆவர். தங்களது பகுப்பாய்வுகளில், அறிவு சார்ந்த ரீதியில் முதலாளித்துவத்தின் தேவைகளை எடுத்துரைத்தார்கள். அந்தத் தேவைகள் அடையப்படக் கூடியவைதான் என்ற நம்பிக்கையையும் ஏற்படுத்தினார்கள்.
நாம் கீன்ஸைப் பற்றி முதலில் பார்க்கலாம். அவர் இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜில் படித்தவர். முதலாளித்துவத்தின் முரண்பாடுகளை அவர் உணர்ந்திருந்தார். அவை அறிவு சார்ந்த மேலாண்மைக்கு உட்பட்டவை என்று நம்பினார். முதலாளித்துவ நாடுகளுக்கிடையிலான உறவுகள், பொருளாதாரக் குவியல் முறையில் ஏற்படும் உள்முரண்பாடுகளைச் சிர் செய்தல் ஆகியவற்றைப் பற்றிக் கவலைப்பட்டார். பொருளாதாரப் பெருமந்தம் ஏற்பட்டபொழுது, சேயின் விதியைப் புறக்கணித்து, தனது மாபெரும் படைப்பான வேலைவாய்ப்பு, வட்டி, பணம் பற்றிய பொதுவிதி" என்னும் நூலை (1936) எழுதினார். (தனக்கு வேண்டிய தேவையை வினியோகம் உருவாக்கிக் கொள்கிறது என்று மரபு வழி வினியோகஸ்தர்கள் கருதுகிறார்கள் என்பது சே. விதி). அந்த பொருளாதார நூலில் முதலாளித்துவத்தின் கீழ் பொருளாதாரக் கட்டுமானத்திற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளின் தன்மை பற்றியும் அவற்றை அரசுகள் எவ்வாறு எதிர் கொள்ள வேண்டுமென்பது பற்றியும் முதன் முதலாக வெளியாயின. அரசு தலையிட்டு, முழுவேலை உத்திரவாதத்திற்கான சாதகநிலைகளை உருவாக்குவதுதான் தக்க பதில் என்று கீன்ஸ் எண்ணினார். அவர் காலத்து உலகமய செல்வாக்கிற்கேற்ப, கட்டுப்பாடற்ற வணிகத்தை சிர் செய்வதும், ஓரளவு தேசிய சுய நிறைவடைவதும் அவசியமென வற்புறுத்தினார். அவர் காட், சர்வதேச நிதியம், உலக வங்கி ஆகியவற்றை உருவாக்கி உலக வணிகம் மற்றும் நிதியமைப்பை நிலைப்படுத்தும் தன்மையிலமைந்த பிரட்டன் உட்ஸ் கோட்பாட்டின் முக்கிய கர்தாக்களில் ஒருவர். பொதுவாக கீன்ஸ் கோட்பாடானது, சமூக ஜனநாயகம், மக்கள் நல அரசு ஆகியவையெல்லாம் முதலாளித்துவத்தின் அறிவு சார்ந்த வெளிப்பாடு என்று குறிப்பிடுவதாக நம்பப்படுகிறது. மூலதனத்திற்கும் தொழிலுக்குமிடையே அரசியல் சமரசத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு மறுசிராக்கத்திற்கு அது கட்டியம் கூறுவதுபோல் தெரிகிறது.
1930ல் ஏற்பட்ட பொருளாதாரப் பெருமந்தத்தின் தொடக்கத்திலேயே, "நமது பேரப்பிள்ளைகளுக்கான பொருளாதாரச் சாத்தியங்கள்" என்ற ஒரு கட்டுரையை கீன்ஸ் எழுதினார். அதில் வளமான சமுதாயங்களில் ஒவ்வொருவரின் வாழ்வாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்கான பொருளாதாரப் பிரச்சினைகள் இன்னும் நூறு ஆண்டுகளில் தீர்க்கப்பட்டு விடும் என்று கூறியிருக்கிறார். அதற்குப் பிறகு, வேலை என்பது நாளொன்றுக்கு மூன்று மணி நேரம், வாரத்திற்கு பதினைந்து மணிநேரம் என்று குறைந்துவிடுமாதலால், ஓய்வு நேரத்தை எவ்வாறு செலவிடுவது என்பது பிரச்சினையாக இருக்கும் அந்த நிலையில், "பொருளாதாரத் தேவை என்னும் இருட்குகையிலிருந்து சமுதாயத்தை வெளிக் கொணர" புதிய நெறிமுறைகள் உருவாக்கப்படும் என்று கருதினார். இருந்தாலும் அது வரை "நேர்மையே தீமை, தீமையே நேர்மை" என்னும் நீதிக்கு மாறான நெறிமுறைகளையே உலகம் கைக்கொண்டிருக்கும். அதாவது சொத்துக்குவிப்பிற்கு ஆதாரமான பேராசை, சுரண்டல் ஆகியவற்றோடு இயங்கும்.
ஷூம் பீட்டர், அமெரிக்காவிலுள்ள ஹாவர்டில் கற்றவர். ஒரு பழமை விரும்பி. கீன்ஸ் மற்றும் கீன்ஸின் கோட்பாடுகளை எதிர்ப்பவர். முதலாளித்துவத்தின சாரமாக, அறிவுசார் தொழிலதிபர்கள் என்னும் கருத்தை வலியுறுத்துபவர். இன்னும் ஏகபோகம் அதிக வளர்ச்சி பெற்றால், அதுவே முதலாளித்துவத்தின் முடிவிற்கு இட்டுச் செல்லும் என்பதை அழுத்தமாகக் கூறியவர். முதலாளித்துவக் கட்டமைப்பில் ஏற்படும் நெருக்கடிக்குக் கூறப்படும் கருத்துக்களை எதிர்த்து வாதிட்டவர். முதலாளித்துவமானது பொருளாதாரக் காரணங்களினால் பொருளாதாரத் தேக்க நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்று கீன்ஸின் முதன்மைச் சிடரான ஆல்வின் ஹான்சன் (அமெரிக்கர்)னின் வாதத்தைக் கடுமையாக எதிர்த்து முதலாளித்துவத்தின் பிரச்சினைகள் சமுதாயம் சார்ந்தவை என்றார்.
அறிவுசார்ந்த பொருளாதார அமைப்பாக முதலாளித்துவம், சமகாலத்தில் தோன்றிய ஏகாதிபத்தியத்திற்கு எதிரானதாக இருப்பதாகவும் ஷூம்பீட்டர் வாதிடுகிறார். அது கடந்த காலத்தில் போர் எந்திர வளர்ச்சியால் ஏற்பட்டதுபோலவும், பொருளாதார வகையில் கூறுவதானால், ஏகபோக பெரும் வர்த்தக அமைப்புகள் பெருகியதால் ஏற்பட்டது போலவும் இருப்பதாகக் கூறுகிறார்.
"ஏகாதிபத்தியங்களின் சமூகவியல்" (1919) என்னும் தனது நூலில், முதலாளித்துவம் இயல்பாகவே ஏகாதிபத்தியத்திற்கெதிரானது. நடைமுறையில் உள்ளது போன்ற ஏகாதிபத்தியப் போக்குகள், முதலாளித்துவமல்லாத கூறுகளின் ஆதரவுடன் வெளியிலிருந்து முதலாளித்துவ உலகினுள் கொண்டு வரப்பட்ட அயல் கூறாகவே பார்க்க முடிகிறது என்றார்.
அறிவுசார்ந்த முதலாளித்துவம் பற்றிய இதுபோன்ற மாயையானது, இரண்டு பொருளாதார வல்லுநர்களின் மூளையிலிருந்து வெறுமனே உதித்துவிடவில்லை. உலக வேலையளவில் பாதியையும், உலக உற்பத்தியில் 60 சதத்தையும், தங்கத்திற்கு நிகராகக் கருதப்பட்ட செலாவணி நாணயத்தையும் அணு ஆயுதத்தில் ஏகபோகத்தையும் கொண்டு, இரண்டாவது உலகப் போரினின்றும் பாதிப்பேயில்லாமல் வெளிவந்த அமெரிக்காவின் தலைமையில் மீட்கப்பட்ட முதலாளித்துவ காலத்து உணர்வுகளையே அந்த மாயை பிரதிபலித்தது. இரண்டாவது உலகப் போருக்குப் பின்னால் மிக வலுவான பொருளாதார, அரசியல், ராணுவ பலத்தைக் கொண்டிருக்கும் அமெரிக்கா, இந்த முதலாளித்துவ அறிவுசார் தன்மையை ஆதரித்து நிற்பதுபோல் நடத்தது. சர்வதேச வியாபாரம் மற்றும் நிதியத்திற்காக பிரிட்டன் வுட்ஸ் அமைப்பு உருவாக்கப்பட்டதும் நியூயார்க்கில் புதிய ஐக்கிய நாடுகள் சபை நிறுவப்பட்டதும், ஒரு வித்தியாசமான, மிகவும் நிலையான முதலாளித்துவத்திற்குக் கட்டியம் கூறுவதுபோல் காட்டப்பட்டது. கைப்பற்றப்பட்ட ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகளோடு கடைப்பிடிக்கப்பட்ட சாதகமான அணுகுமுறையும் மேற்கு ஐரோப்பிய நாடுகள் தங்களது பொருளாதாரத்தைப் புனரமைத்துக் கொள்ள உதவும் வகையில் மார்ஷல் திட்டத்தை அமல்படுத்தியதும், புதிய உலக அதிகார மையத்தின் இரக்க மனப்பான்மைக் காட்டுவதுபோல் தெரிந்தன. அட்லாண்டிக் ஒப்பந்தத்தை அமெரிக்கா ஏற்படுத்திக் கொண்டது. அதற்கு மேலே, அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கிடையே முக்கூட்டு ஒப்பந்தமும் செய்து கொண்டது. மேற்கு ஐரோப்பாவில் சமூக ஜனநாயகமானது, மூலதனத்தோடு பரஸ்பர நட்புறவை வலுப்படுத்திக் கொள்வதாகவும், மகிழ்ச்சியுடையதாகவும் செழித்திருந்தது. மக்கள் நல அரசின் வளர்ச்சியானது, புதியதாக உருவாக்கப்பட்ட முதலாளித்துவத்தின் சின்னமாக விளக்கப்பட்டது.
ஐரோப்பிய, ஜப்பானிய பொருளாதாரங்கள் வேகமாக புனரமைக்கப்பட்டன. புதிய பொற்காலத்திற்குக் கட்டியம் கூறும் மிக வேகப் பொருளாதார வளர்ச்சியானது, முதலாளித்துவத்தின் சிறந்த தொடக்க நாட்களை நினைவுபடுத்துவதாக இருந்தது. மூன்றாம் உலக நாடுகளில் பெருகிவந்த காலனி ஆதிக்க எதிர்ப்பு இயக்கங்கள், புரட்சிகள் ஆகியவற்றின் விளைவாக ஐரோப்பிய காலனியாதிக்கம் பின்னடைவைச் சந்தித்தது. காலனியத்திற்கு எதிரான சக்தியாகத் தன்னைக் முன்னிறுத்திக் கொண்ட அமெரிக்கா, பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் புதிய வளர்ச்சி சித்தாந்தத்தை ஆதரித்து ஊக்கமளித்தது.
இரண்டாவது உலகப்போர் முடிந்து இருபது ஆண்டுகளில் பொருளாதாரத்திற்கு முதல் நோபல் பரிசு பெற்ற பால் சாமுவேல்சன் போன்ற அமெரிக்காப் பொருளாதார வல்லுநர்கள், வர்த்தகச் சுழற்சி முடிவிற்கு வந்துவிட்டதாக அறிவித்தார்கள். அமெரிக்காவில் உள்ள சிந்தனையாளர்கள், அமெரிக்காவில் மேலாதிக்கத்திற்குச் சாதகமான புதிய யுகம் தோன்றியிருப்பதைக் குறிக்க, இது அமெரிக்காவின் நூற்றாண்டு என்று குறிப்பிட்டார்கள். மேலை நாடுகளிலுள்ள சமூக விஞ்ஞானிகள், இந்த அறிவு சார்ந்த, நடைமுறை சார்ந்த முதலாளித்துவ அமைப்பைக் கொண்டாடினார்கள்.
அமெரிக்காவில், மெக்கார்தியிசம் என்ற பெயரில் நடைபெற்றுக் கொண்டிருந்த கம்யூனிச எதிர்ப்பு நரவேட்டை நடவடிக்கைகள் "தொழிலாளர் - மனித உரிமை ஆதரவாளர்கள் - சிறு விவசாயிகள்" ஆகியோரின் புதிய கூட்டு முயற்சியின் முதுகெலும்மை முறித்துக் கொண்டிருந்தது.
ஏகபோக முதலாளித்துவத்தின்கீழ், கீன்ஸ், ஷூம்பீட்டர் ஆகியோர் உருவாக்கிய அறிவு சார்ந்த முதலாளித்துவத்தின் எந்தக் குணாம்சமும் இன்று பொருந்துவதாக இல்லை. முதலாளித்துவத்தின் ஏகாதிபத்தியப் போக்கு கொஞ்சமும் குறையவில்லை. பதிலாக, இராணுவத் தன்மையும் ஏகாதிபத்தியப் போக்கும், முன்னெப்போதும் இல்லாத அளவு பொருளாதாரச் செயல்பாடுகளில் இணைந்து அதன் அன்றாடச் செயல்பாடுகளில் இரண்டறக் கலந்து ஊடுருவியிருக்கிறது. ஆசியா மற்றும் பிற பகுதிகளில், போரின் மூலமே அமெரிக்காவின் மேலாதிக்கம் நிறுவப்பட்டிருக்கிறது. பயனுள்ள கோரிக்கைகளை மக்கள் அரசின் மூலம் நிறைவேற்றுவது, நாட்டு வருமானம், நிதி ஆகியவற்றைச் சிரமைப்பது - இவை கீன்சிய முத்திரையாகும் - ஆகியவை அழிக்கப்பட்டு விட்டன.
ஏகபோக முதலாளித்துவ அமைப்பு, தனது ஆற்றல்மிக்க முரண்பாடான வழிகள் அனைத்தையும் கரைசேர முயற்சித்தும், அதனால் நெருக்கடியில்லாமல் தொடர்ந்திருக்க முடியவில்லை என்பது பாரன், ஸ்வீஸி ஆராய்ச்சியின் மையக் கருத்தாகும். தேக்க நிலைக்கான சக்திகள், தங்களை மீண்டும் உறுதிப்படுத்திக் கொள்ள தொடர்ந்து அச்சுறுத்தி வருகின்றன. 1970களின் தொடக்கத்தில், மிக மோசமான பொருளாதார நெருக்கடியில் மீண்டும் அமெரிக்கா சிக்கிக் கொண்டது. திரும்பவும் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியானது. எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் எடுத்த நடவடிக்கைகளால் எழுந்த நெருக்கடியுடன் சேர்ந்து கொண்டதாலும் அமெரிக்காவின் மேலாதிக்கம் வீழ்ச்சியடைந்தது. அமெரிக்காவை மையமாகக் கொண்ட மொத்த உலகப் பொருளாதார அமைப்பும் நிலையற்றதாகிக் கொண்டிருந்தது.
1970களின் ஆரம்ப காலத்து நெருக்கடிகள், வியட்நாமில் அமெரிக்கா அடைந்த தோல்வி காரணமாக, மேலும் சிக்கலுக்குள்ளாகியது. டாலரின் நிலையில் மோசமான ஏற்றத் தாழ்வுகளை அந்த யுத்தம் ஏற்படுத்தியது. பெருமளவு டாலர் பிற நாடுகளுக்குச் சென்றது. மிகப்பெரிய யூரோ-டாலர் சந்தை உருவாக ஏதுவாயிறறு. 1971ல் நிக்ஸன் தங்கத்திலிருந்து டாலரைத் தொடர்பற்றதாக்கியதால் டாலர் - தங்க ராஜ்ஜியம் முடிவுக்கு வந்தது. பிற நாடுகளில் தனது மேலாதிக்கத்தை அதிகப்படுத்தி பொருளாதாரப் பிரச்சினைகளைச் சமாளிக்க, யுத்த யந்திரங்களைத் தொடர்ந்து பயன்படுத்தும் அமெரிக்காவின் ஆற்றலுக்கு, வியட்நாமில் ஏற்பட்ட யுத்த தோல்வி, கட்டுப்பாடுகளை ஏற்படுத்தியது.
உலக உற்பத்தியில் தனி நபர் வளர்ச்சி விகிதமானது, 1960களில் இருந்ததைவிட 1970களில் குறைந்தது. பிரச்சினை அதோடு தீர்ந்துவிடவில்லை. 1970களைக் காட்டிலும் 1980களில் குறைவாகவும், 1980களைக் காட்டிலும் 1990களில் குறைவாகவும், 1990களைவிட 2000களில் குறைவாகவும் அது தொடர்கிறது. அமெரிக்கப் பொருளாதார மற்றும் பிற வளமான நாடுகளின் பொருளாதார அனுபவங்கள், பல பத்தாண்டுகளாக தேக்க நிலை அதிகரித்துவரும் உலகப் பொருளாதாரத்தோடு முழுமையாக ஒத்திருக்கின்றன
முதலாளித்துவ அரசியல் பொருளாதாரத்தில் 1970களிலும் 1980களிலும் நிறையப் பதங்கள் உருவெடுத்தன. அவை இப்போது மிகவும் பழகிவிட்டன. அவை மறுகட்டமைப்பு, தாராளமயம், தனியார் மயம், சுதந்திரச் சந்தை, உலகமயமாக்கல், முதலியன. உலக முழுவதும், கூலியைக் குறைத்தல், சங்கங்களை உடைத்தல், தொழிலாளர்களுக்கான அரசு ஆதரவையும் நுகர்வோருக்கான மானியத்தையும் விலக்குதல், மூலதனமும் இடம் பெயர்வதற்குள்ள தடைகளை நீக்குதல், சொத்து, வருவாய் ஆகியவற்றை மேலிருந்து கீழ்வரை அனைவருக்கும் மீண்டும் பகிர்ந்தளித்தல் போன்ற நடவடிக்கைகளே இறுதிக் குறிக்கோளாகின. வேலைவாய்ப்பு, உடல்நலம், கல்வி, ஓய்வுப் பயன், உணவு கிடைத்தல், சுற்றுப்புறம் போன்ற அடிப்படைப் பிரச்சினைகளை தடையேதுமில்லாத முதலாளித்துவம் ஏற்றுக் கொண்டது. கீன்ஸ் மற்றும் ஷூம்பீட்டர் போன்ற சிந்தனாவாதிகளுடன் தொடர்புடைய அறிவுசார்நிலை என்னும் அனுமானம் - அவர்களுக்கு முன்னாலிருந்த மேக்ஸ் வெபர் என்னும் சமூக வியலாளர் முதலாளித்துவத்தை முரண்பட்ட மனக்கிளர்ச்சியின் அறிவுசார்ந்த மனநிலை என்று வர்ணித்தது எல்லாம் திடீரென்று பழங்கனவாய் போனது.
முதலாளித்துவப் பொருளாதாரம் தொடர்ந்து வீழ்ச்சியுற்றும் கூட, சந்தையின் பாலுள்ள வெற்று நம்பிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது. இரண்டாவது உலகப் போருக்குப் பிந்திய காலத்திலிருந்ததை விட, முதலாளித்துவம் மிகவும் தாழ்ந்த நிலையிலேயே இப்போது இருக்கிறது. சமுதாயத்தின் கீழ் மட்டத்திலுள்ள வர்க்க அமைப்புக்கள் முன்னைவிட மிகவும் வலிமை குன்றியிருக்கிறது. இது நேரடியாகச் சுரண்டும் அமைப்பாக மாறிவிட்டது. அது நாடுகளின் வலிமையை அதிகரிக்கவிட்டாலும், உயர்மட்டத்திலுள்ளவர்களை கொழுக்க வைத்திருக்கிறது. அதற்கேற்ப ஆளும் வர்க்கத்தின் ஆட்சிச் சித்தாந்தங்கள் மாறுகின்றன.
சோவியத் யூனியனின் சிதைவால் ஏற்பட்ட வெற்றிடத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி தன்னை மீண்டும் நிலை நிறுத்திக் கொண்டு தனது உலக மேலாதிக்கத்தை விரிவுபடுத்தவும் அமெரிக்கா முயற்சிக்கிறது. ஷூம்பீட்டரைப் பொருத்தவரை, முதலாளித்துவத்தின் உள்ளார்ந்த குணங்களை விட, யுத்தம் மற்றும் ஏகபோகத்தின் விளைவாகத்தான் ஏகாதிபத்தியம் தோன்றியது என்று கூறினாலும் கூட, எதார்த்தத்தில் இந்த வேறுபாடுகள் தவறாகவே உள்ளன. உலக முதலாளித்துவ அமைப்பின் வலிமை வாய்ந்த அரசாகத் தன்னைப் பறைசாற்றிக் கொண்டிருக்கும் அமெரிக்கா, தனது பொருளாதார அரசியல் மேலாதிக்கத்தை இராணுவத்தின் மூலம் நிலைநிறுத்திக் கொள்ளும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதை வெளிப்படையாகவே வெளியுலகத்திற்குப் பறைசாற்றவும் செய்கிறது. இந்தப் பிரகடனத்தை வெளியிட்ட கையோடு, ஈராக்கின் மீது படையெடுக்கும் திட்டத்தையும் அறிவித்தது. உலகத்திலேயே தோண்டி எடுக்கப்படாத அதிக எண்ணெய் உற்பத்தி விரிவாக்கத்திற்கு மிக அதிக வாய்ப்பு உள்ள நாடு. அந்த நாட்டில் இல்லாத பேரழிவு ஆயுதங்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் சாக்கில் உள்ளே நுழைந்தது. ஒரு சில மாதங்களில் உள்ளே நுழைந்த அமெரிக்கா, போரைத் தொடர்ந்து கொண்டே நீண்டகாலமாக அங்கேயே தங்கிவிட்டது. இந்த அதிகாரத்தைப் பயன்படுத்துவது அந்நாட்டின் உரிமையாயிற்று. 2001 ஆம் ஆண்டு பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதல் உலகத்தின் பெரும் பகுதியைக் காட்டுமிராண்டிகளின் கூடாரமாக்கிவிட்டது. அவற்றை தனக்கு அடங்கி நடக்கும் சிறு நாடுகளோடு கூட்டணி அமைத்து அமெரிக்கா மேலாதிக்கம் செய்கிறது.
முந்திய காலத்தில் முதலாளித்துவத்தைப் போலவே மிகப் பழமை வாய்ந்தது ஊக மூலதனம். இது தேசியப் பொருளாதாரத்தையே மேலாதிக்கம் செய்யுமளவுக்கு வளரும் என்று உலகில் யாருமே கனவுகூடக் காணவில்லை. ஆனால் இது வளர்ந்திருக்கிறது ஸ்வீஸியின் கருத்துப்படி, மிகப் பெரும் கூட்டு நிறுவனங்களிலிருந்து அதிகாரத்தை நீக்கி, அவற்றை நிதிச் சந்தைகளில் ஈடுபடுத்துவதில் அது முடியும் (நிதிச் சந்தைகளில் பெரும் கூட்டு நிறுவனங்களே முக்கிய பங்காளர்களாவர்). ஆடம்ஸ்மித்தின் மறைமுக ஆதிக்கம், புதிய வடிவில் அதிக வலுவோடு புத்துயிர்ப்புப் பெறவதாக ஸ்வீஸி கூறினார். உலகம் தழுவிய ஏகபோக முதலாளித்துவத்தின் இயல்பான வளர்ச்சியாகிய உலகளாவிய நிதி மூலதனத்தின் ஆதிக்கம் இப்போதுதான் உள்ளது.
ஒரு பக்கத்தில் பட்டினி, ஏற்றத்தாழ்வுகள்; மற்றொரு பக்கத்தில், "தீமையே நேர்மை" என்று கீன்ஸ் பசப்பிய கருத்தியல். வாழ்வுக்கான பொருளாதார நிலைமைகள் மிக மோசமாகி வருகின்றன.
சுருங்கச் சொன்னால், மூலதனக் குவிப்பு என்னும் சந்தைப் பொருளாதாரத்தை நோக்கி எல்லாமே திரும்பிவிட்ட இந்த உலகில், மனித சமுதாயத்தையும் இப்பூவுலகையும் பிரிக்கிற, பாதிக்கிற அடிப்படைப் பிரச்சினைகள் மேலும் மோசமடையவே செய்யும்.
"ஒழுங்கமைந்த முதலாளித்துவம்" என்பதன் மூலம் சமகாலத்தில், அரசு தலையீடுகளினால் உருவாக்கப்பட்ட கட்டுப்படுத்தப்பட்ட நடைமுறைகள், தொடர்ச்சியான பொருளாதார வளர்ச்சிக்கு உறுதி செய்திருப்பதையும் உள்ளுக்குள்ளே உருவாக்கப்பட்ட சமூக, அரசியல் நெருக்கடிகள் நீக்கப்பட முடியாவிட்டாலும் குறைக்கப்பட்டிருப்பதையும் உணருகிறோம் என்ற வாதங்களை தாராளமய சிர்திருத்தங்கள் பொய்யாக்கி விட்டன. கீன்ஸீம், ஷூம்பீட்டரும் அறிவு சார்ந்த முதலாளித்துவத்தின் மேலுள்ள தங்களது மூடநம்பிக்கையைப் படரவிட்டு, முதலாளித்துவ அமைப்பிலுள்ள ஆபத்தான முரண்பாடுகளை மூடி வைத்தார்கள். முடிவில் ஆபத்தான முரண்பாடுகள்தான் மேலோங்கி நிற்கின்றன. முதலாளித்துவம் தனது ஏகபோக நிலையில் மீண்டும் தேக்க நிலையைச் சந்திக்கிறது.
இதன் விளைவாக, எதிர்பாரா வகையில் சமூக ஜனநாயகமானது முதலாளித்துவ அரசியல் இயக்கமாக வீழ்ச்சியடைந்தது. 1981ல் பிரான்சின் முதல் சோஷலிஸ்ட் அதிபராக பிராங்காய்ஸ் மிட்டரண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் தேசியமயமாக்குவதற்கான அவருடைய சிறந்த சமூக ஜனநாயகக் கோட்பாடுகள் மூலதனத்தின் எதிர்ப்புக் காரணமாக விரைவிலேயே தகர்ந்துவிட்டன. மிட்டரண்டு ஆட்சியிலிருக்கும்போதே, ஒரு சில ஆண்டுகளிலேயே, பிரான்சு நாடானது நவீன தாராள மயத்திற்குத் திரும்பிவிட்டது. இது, இரண்டாவது உலகப்போருக்குப் பிந்திய சமூக ஜனநாயக அரசியலுக்கு ஏற்பட்டிருக்கும் தடைகளைக் குறிப்பதாகும். மிகப் பெருமளவில் மக்கள் இயக்கங்களை நடத்தாமல் "அறிவுசார்ந்த" முதலாளித்துவத்தோடு இசைந்து போகக்கூடிய "சிர்த்திருத்தங்களை" அமல்படுத்துவதையே இடதுசாரியினரும் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். இந்த அமைப்பிற்குள் பயனுள்ள சிர்திருத்தங்களைச் செய்வதற்கான வாய்ப்பு அறவே இல்லை.
சோவியத் யூனியன் குலைந்துபோனது நிலைமையை மிகவும் மோசமாக்கிவிட்டது. முதலாளித்துவத்தை சர்வதேசமயமாக்குவதற்கு எவ்விதத் தடையுமல்லாமல் போய்விட்டது. தொழிலாளர்களை நடத்தும் விதம் மற்றும் உலக அளவில் கீழ்நிலையிலுள்ள நாடுகளை மேலாதிக்கம் செய்வது ஆகியவற்றில் இரக்கமேயில்லாமல் நடந்துகொள்ளும் பச்சையான முதலாளித்துவத்தை நோக்கி 1990 களில் உலகம் நகரும் திடீர்த் திருப்பங்களும் நடைபெற்றன. கெடுபிடிப்போரில் முதலாளித்துவம் அடைந்த வெற்றி காரணமாக "மேலிருந்து" வர்க்கப் போராட்டத்தை ஏகாதிபத்தியம் முடுக்கிவிட்டுள்ளது.
இத்தகைய நிலையிலான மூலதனத்தின் நியதிக்கேற்ற வகையில், அதன் வட்டத்திற்குள்ளேயே ஆன இடதுசாரிகளின் அறிவு சார்ந்த அரசியலுக்கு இடமில்லை என்பது நிதரிசனமான முடிவு. இத்தகைய பாசாங்குகளெல்லாம் போலிக் கருத்துக்கள் என்பதும் நிரூபிக்கப்பட்டுவிட்டன. தேக்கநிலை திரும்புதலினாலும், நவீன தாராளமய உலகக்கட்டமைப்பு அதிகரித்தலினாலும், பழமை வாதக் கருத்தோட்டமானது அனைத்துத் துறைகளிலும் நிதிக் குவியலுக்குள்ள தடைகளை அகற்றி "சுதந்திரச் சந்தை முதலாளித்துவம்" செயல்படுமாறு செய்கிறது. அதன் விளைவாக சமூக கலாசார வாழ்விலுள்ள அனைத்தும் சரக்குமயமாக்கப்படுகின்றன. அதனால் குடும்பத்திலும், இனத்திலும், சமுதாயத்திலும் ஆழமான முரண்பாடுகள் உண்டாகின்றன. எந்தப் பொருளாதார அமைப்பும், குறிப்பாக முதலாளித்துவம், கட்டுப்பாடில்லாமல் தனது நியதிகளை கடைப்பிடிக்கும்படி விடப்பட்டால் அது வாழ முடியாது என்று ஷூம்வீட்டர் அழுத்தமாகக் கூறினார். முடிவில் அது தன்னைத்தானே அழித்துக் கொள்ளும். ஏகபோகமாக்கல், ஊக வணிகம், இராணுவத் தன்மை, ஏகாதிபத்தியம் ஆகியவையெல்லாம் உள்ளடக்கிய "சுதந்திரச் சந்தை முதலாளித்துவம்" என்னும் கருத்து அபாயகரமான மாயவாதமாகும். வலதுசாரிகளின் அரசியலில் மெய்யான, அறிவுசார்ந்த தன்மை குறைந்து போய், பகாசுரக் கொள்ளை, வெளிப்படையாக மீண்டெழும் இனவாதம், போர், ஏகாதிபத்தியம், பாலினப் பிரச்சினை, மத அடிப்படைவாதம் ஆகியவை அதிகரித்து வருகின்றன. அதன் விளைவாக சர்வதேச அளவில் காட்டுமிராண்டித்தனத்தை தீவிரப் படுத்துவதன் மூலம் தன்னையே அழித்துக் கொண்டு தன்னுடன் தொடர்பு கொண்ட அனைத்தையும் அழித்து வருகிறது.
இது முதலாளித்துவம்தான் பிரச்சினை என்னும் தலையாய உண்மையை நமக்கு உணர்த்துகிறது. இன்றைய காலகட்டத்தில் அதற்குள்ள ஒரே தீர்வு, சோசலிமே, சோசலிச இயக்கம் எப்பொழுதும் புரட்சிகரமானது. ஜனநாயகமுடையது, சமத்துவமானது, சுற்றுப்புறத்தை வளமாக்குவது, இவற்றிற்காக மக்களைத் திரட்டிப் பங்கேற்க வைப்பது. அத்தகைய ஒரு சமுதாயத்தை அமைப்பதில் எற்படும் இடையூறுகள் ஏராளம். ஆனால் "ஏராளம்" என்பதும் "முடியாது" என்பதும் ஒரே பொருளுடையன அல்ல.
நன்றி: சமூக விஞ்ஞானம்

samedi 16 février 2013

நாடாளுமன்றத்தில் காலித்தனம் செய்ய மாதச்சம்பளம் ரூ. 1,40,000


 
Salary hike to MPs for Boycotting Parliament - Tamil Economics Articles நாடாளுமன்றத்தின் இரு அவை உறுப்பினர்களுக்கும் தலா மாதச்சம்பளம் ரூ50,000. அத்துடன் தொகுதிப் படிப்பணம் மாதம் 45,000 ரூபாய். சொந்த அலுவலகச் செலவுக்கு மாதம் 45 ஆயிரம் ரூபாய். ஆக மொத்தம் 1,40,000 ரூபாய் சுளையாக மாதச் சம்பளம்.
வானூர்திப் போக்குவரத்து, தொடர் வண்டிப் போக்குவரத்து, தொலைபேசி போன்ற இலவசங்கள் ஏராளம், ஏராளம்! (உறுப்பினர் மனைவி - கணவன் வானூர்தியில் முதல் வகுப்பில் எத்தனை தடவை வேண்டுமானாலும் போய்வரலாம்.) 
இவர்களுக்கு ஏற்கெனவே மாதச் சம்பளம் ரூ16,000, தொகுதிப் படிப்பணம் ரூ20,000, சொந்த அலுவலகப் படிப்பணம் ரூ20,000. இப்பொழுது மாதச் சம்பளம் மும்மடங்காக உயர்த்தப்பட்டு ரூ50,000 ஆக்கப்பட்டுள்ளது. தொகுதிப் படிப்பணம் உயர்த்தப்பட்டு ரூ 45,000 ஆக்கப்பட்டுள்ளது. சொந்த அலுவலகச் செலவுக்கான மாதத் தொகை 45 ஆயிரம் ரூபாய் ஆக்கப்பட்டுள்ளது.
80,001 ரூபாய் ஆக மாதச் சம்பளத்தை உயர்த்த வேண்டுமென்று மக்களவையில் உறுப்பினர்கள் "போராடி" அவைக்கூட்டம் இரு முறை ஒத்திவைக்கப்பட்டது. அப்போராட்டத்திற்கு லாலுவும் முலாயமும் தலைமை தாங்கினார்கள். மற்றும் ஐக்கிய சனதாதளம், பகுஜன் சமாஜ் கட்சி, அகாலிதளம், சிவசேனை ஆகிய கட்சிகள் பற்கேற்றன.
அத்தோடு நிற்காமல் அவைக்குள் போட்டி மக்களவைக் கூட்டமும் நடத்தினர். இந்தப் போட்டி நாடாளுமன்றக் கூட்டத்தில் லாலுபிரசாத் பிரதமராகவும், கோபிநாத் முண்டே (பா.ஜ.க.) அவைத் தலைவராகவும் செயல்பட்டனர். (பா.ஜ.க. தலைமை பின்னர் போட்டி அவைக் கூட்டத்தில் கலந்து கொண்ட தன் கட்சி உறுப்பினர்களைக் கண்டித்தது.)
நடுவண் அரசின் செயலாளர்களுக்கு மாதச் சம்பளம் 80,000 ரூபாயாக இருப்பதால், ஒரு ரூபாய் கூடுதலாக்கி ரூ80,001 ஆக தங்களுக்குச் சம்பளம் தரவேண்டுமென்று கேட்டனர் மக்களவை உறுப்பினர்கள்.
நடுவண் அரசின் செயலாளர், உயர் நீதிமன்ற, உச்சநீதி மன்ற நீதிபதிகள் உள்ளிட்டோருக்கு உயர்த்தப்பட்டுள்ள சம்பள உயர்வு அநீதியிலும் அநீதி.
எம்.பி.ஏ., எம்.சி.ஏ., பி.இ., பி.எச்.டி., எம்.ஏ., எம்.எஸ்.சி., போன்ற படிப்புகள் படித்துத் தேறியவர்கள் மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பளம் உள்ள வேலை கிடைத்தால் போதுமென்று ஆலாய்ப் பறக்கின்றனர்.
தொழிற்சாலைகளில் திறன் பெற்ற தொழிலாளர்கள் ஒப்பந்தக் கூலிகளாக மாதம் 4 ஆயிரம் சம்பளத்திற்கு அல்லாடுகின்றனர். முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர், இளநிலை பட்டதாரி ஆசிரியர், தமிழாசிரியர், ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் என பயிற்சிகள் முடித்த இளைஞர்கள் வேலையின்றி அலைகிறார்கள்.
ஆண்டிற்கு 100 நாள் வேலைத் திட்டத்தில் நாளொன்றுக்கு நூறு ரூபாய்க்கு மண் சுமக்கும் கிராமத்துப் பெண்கள், முதியவர்கள், இளைஞர்கள் பல கோடிப் பேர்.
இந்த நாட்டில் செயலாளர் பதவி வகிக்கும் ஒருவர்க்கு ஒரு நாள் சம்பளம் ரூ3076.92. அவருக்கு மகிழுந்து இலவசம். ஊழியர்கள் பலர் அரசுச் சம்பளத்தில்! சட்டப் படியான இதர வரவுகள் ஏராளம்.
இரு அவை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மாத வருமானம் தலா ரூ1,40,000 எனில், ஒரு நாள் ஊதியம் ரூ 5,384.62. (வேலை நாள் 26 என்று கணக்கிட்டால்) இதுவன்றி இவர்கள் அவைக் கூட்டத்தில் கலந்து கொண்டால் ஏற்கெனவே ஒரு நாளைக்கு ரூ1,000 படிப்பணம் என்றிருந்தது இப்போது இரட்டிப்பாக்கப்பட்டு ரூ2,000 ஆக உயர்ந்துவிட்டது. அவ்வாறான நாள்களில் - ஒரு நாள் ஊதியம் 5,384.62 + 2,000.00 = ரூ7,384.62.
வருகைப் பதிவேட்டில் கையொப்பமிட்டு விட்டு, அவைக் கூட்டத்தில் கலந்து கொள்ளா விட்டாலும் ஒரு நாளைக்கு ரூ2,000 படி உண்டு.
ஒரு நாள் கூலியாக 65 ரூபாய் பெறுவதற்கு, விடிவதற்குள் வேனில் ஏறி இரவு வீடுவந்து சேரும் சிவகாசி தீப்பெட்டித் தொழிற்சாலைப் பெண்களின் வாக்குகளைப் பெற்றுச் சென்றவர்கள் ஒரு நாள் ஊதியமாக ரூ7,384.62 பெறுகிறார்கள்.
இந்த வருமானங்கள் மட்டுமா? தொகுதி மேம்பாட்டு நிதி என்று ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு ஆண்டுக்கு 2 கோடி ரூபாய் அளிக்கப்படுகிறது. இவ்வேலையை தமக்கு வேண்டிய ஒப்பந்தக்காரர்களிடம் கொடுத்து தமக்கு வேண்டிய தொகையை வெட்டிக் கொள்கிறார்கள். இன்னும் வெளியே தெரியாத வெவ்வேறு கமுக்க பேரங்களில் பலர் அடிக்கும் கொள்ளைகள் ஏராளம்.
மக்கள் வரிப்பணத்தில் இந்த அளவு கொள்ளையடிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவைக் கூட்டங்களில் முழுமையாகக் கலந்து கொள்கிறார்களா? அதுவும் இல்லை. தொலைக்காட்சியில் பார்க்கும் போது அவைக் கூடம் காலியாகக் கிடக்கின்றது. கொஞ்சம் பேர் அங்கும் இங்குமாக அமர்ந்திருக்கிறார்கள். மற்றவர்கள் ஊர்மேயப் போயிருப்பார்களோ?
அவையில் கலந்து கொண்டாலும் அங்கு விவாதம் நடக்கிறதா? நாட்டு மக்களின் வாட்டம் போக்கிட நல்ல கருத்துகளைப் பரிமாறிக் கொள்கிறார்களா? கலந்தாய்வு செய்கிறார்களா? இல்லை. கலாட்டா செய்கிறார்கள். அவைக் கூட்டம் நடக்கக் கூடாது. ஒத்திவைக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவைக்கு வருகிறார்கள். அதே எதிர்பார்ப்புடன் ஆளுங்கட்சி உறுப்பினர்களும் அவைக்கு வருகிறார்கள்.
ஒலிவாங்கியைப் பிடுங்கி எறிவது, ஊளையிடுவது, கொச்சைச் சொற்களால் குதறிக் கொள்வது, கூச்சல் போடுவது என வகை வகையாய் காலித்தனங்களை அரங்கேற்றுகிறார்கள். இந்தக் காலித் தனத்தில் ஈடுபடுவதற்காக ஒரு நாள் சம்பளம் ரூ7,384.62.
நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சட்டப்படி எந்த நிர்வாகப் பொறுப்பும் இல்லை. அவைக் கூட்டத்தில் கலந்து கொண்டு "ஆம்" - "இல்லை" என்று அறிவித்தால் போதும். கோயில் மாடுகளை விடவும் பொறுப்பற்ற கூட்டமாக நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் வைக்கப்பட்டுள்ளார்கள்.
மக்கள் பிரதிநிதிகளின் ஆட்சி நடக்கிறது என்று காட்டுவதற்கான சோளக் கொல்லை பொம்மைகள்தான் இவ்வுறுப்பினர்கள்.
இவர்களின் வருமானத்தை இந்த அளவு வீங்கிப் பெருக்கச் செய்வது ஏன்? பிரெஞ்சுப் புரட்சி போல், பாரீஸ் கம்யூன் புரட்சி போல், ரஷ்யப் புரட்சி போல் மறுபடியும் பல்வேறு நாடுகளில் மக்கள் கலகம் செய்து, உள்நாட்டு முதலாளிகளையும் பன்நாட்டு முதலாளிகளையும் வீழ்த்தி, புரட்சியில் ஈடுபடாமல் தடுத்திட, மக்களின் ஆட்சி நடப்பது போன்ற மாயத் தோற்றமே இந்த சனநாயக நாடகம். இந்த நாடகத்தின் கதாபாத்திரங்களே நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள்.
சர்க்கஸ் கோமாளிகள் போன்ற இவர்களுக்கு அவையில் வாக்களிக்கும் உரிமையும் ஆட்சியைத் தீர்மானிக்கும் உரிமையும் வழங்கப்பட்டுள்ளது. சனநாயக நாடகத்தில் உள்ள உண்மைக் காட்சி அது மட்டுமே. எனவே, இவர்களில் பலரை உள்நாட்டு, வெளிநாட்டு முதலாளிகளும் அரசியல் கட்சித் தலைமைகளும் வலைவீசிப் பிடிக்கின்றனர். விலைபேசி முடிக்கின்றனர்.
நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் விலையை பன் மடங்கு உயர்த்திவிட்டது உலகமயம். மக்கள் வரிப்பணத்திலிருந்தே அந்த விலையை ஆளும் வர்க்கம் கொடுக்கிறது. ஆளும் வர்க்கம் மக்கள் வரிப்பணத்தில் அடிக்கும் கொள்ளையோடு இந்த சம்பள உயர்வை ஒப்பிட்டால் இது ஒரு பிச்சைக் காசுதான். கடந்த ஆண்டில் இந்தியப் பெருமுதலாளிகளுக்கு இந்திய அரசு செய்த வரித்தள்ளுபடி மட்டும் ரூ2.25 இலட்சம் கோடி.
முதலாளிகளுக்கு நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களும், அவ் உறுப்பினர்களுக்கு முதலாளிகளும் என்று ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்கின்றனர். விலை போவதில் ஆளுங் கட்சி, எதிர்க்கட்சி, வலதுசாரி, இடதுசாரி என்ற வேறுபாடில்லை. அவர்களுக்குள் விதிவிலக்காக சில அன்னப்பறவைகள் உண்டு. அவை மிகமிகக் குறைவு.
சுவிட்சர்லாந்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குச் சம்பளம் தருவதில்லை. கூட்டத்தில் கலந்து கொண்டால் படிப்பணம் மட்டுமே வழங்குகிறார்கள். அங்கு அவர்கள் பகுதி நேரப் பணியாளர்களே. சொந்தமாகத் தொழில் செய்ய உரிமை உண்டு. இதே முறை இங்கும் வரவேண்டும்.
வானூர்திப் பயணம், வசந்த மாளிகைக் குடியிருப்பு, பன்னாட்டு முதலாளிகளின் பகட்டு விருந்துகள், அயல்நாட்டுத் தூதுவரின் அரவணைப்பு, ஆட்சியாளர்கள் அமைக்கும் குழுவில் உறுப்பு வகிக்கும் பொறுப்பு என இத்தனையும் போதாதென்று மக்களின் வரிப்பணத்தையும் சூறையாட வேண்டுமா நாடாளுமன்ற உறுப்பினர்கள்?
மன்னர் மானியம் ஒழிக்கப்பட்டுவிட்டது. சனநாயக மன்னர்களின் மானியம் பன்மடங்கு உயர்ந்துவிட்டது.

நன்றி: தமிழ்த் தேசிய தமிழர் கண்ணோட்டம்

இந்தியாவில் வறுமையை - பசியை ஒழிக்க முடியுமா?

இந்தியாவில் வறுமையை - பசியை ஒழிக்க முடியுமா?
Poverty in India - Can you rule out Hunger? - Tamil Economics Articles உலகம் முழுவதும் பசியில் வாழும் மக்களின் எண்ணிக்கை 100 கோடிக்கு மேல் இருக்குமென்று ஐக்கிய நாடுகள் சபையின் வேளாண் மேம்பாட்டுக்கான சர்வதேச நிதி அமைப்பின் (IFAD) 33வது ஆட்சிமன்றக் குழுக்கூட்டத்தில் இக்கூட்டமைப்பின் தலைவர் கனாயோ வீன்ஸ் கூறியுள்ளார். மேலும் இதில் மூன்றில் ஒரு பகுதியினர் இந்தியாவில் வசிப்பதாகவும் (33 கோடிபேர்) குறிப்பிடப்படுகிறார். ஐக்கிய சபையின் செயலாளர் பான் கீ மூன் பசியால் உலகில் சுமார் 17,000 குழந்தைகள் தினமும் இறப்பதாகவும், சராசரியாக 6 விநாடிக்கு ஒரு குழந்தை இறப்பதாகவும் குறிப்பிடுகிறார்.
இந்தியா உலகப்பசி அட்டவணையில் 94வது இடத்தில் உள்ளதெனவும், 5 வயதிற்குக் குறைவான சிறார்களில் 43 சதவீதம் பேர் எடைக்குறைவோடு உள்ளனர் எனவும், இது உலகிலேயே மிக அதிகமான எண்ணிக்கை எனவும் குறிப்பிடப்படுகிறது. ஆனால் பசி அட்டவணையில் 94வது இடத்தில் இடம் பெறக்கூடிய அளவிற்கு இந்தியாவில் உணவு உற்பத்தியில் பற்றாக்குறை நிலவுகின்றதா என்றால் இல்லையென்பது தான் உண்மை. இந்தியாவின் மொத்த உணவு உற்பத்தி 2009-10ஆம் ஆண்டில் 218.20 மில்லியன் டன். இது 2008-09ஆம் ஆண்டில் 237.47 மில்லியன் டன்னாக இருந்துள்ளது. அதேபோல் தென்மாநில மக்களின் பிரதான உணவாகிய அரிசி 2008-09ல் 99.18 மில்லியன் டன்னாக இருந்தது 2010-11ல் 100 மில்லியன் டன்னாக உயருமெனவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
பிரச்சனை எங்கே?
இந்தியாவில் வறுமையும் பசியும் தொடர்கதையாய் இருப்பதற்கு மூலக்காரணம் திட்டமிட்ட பகிர்வு இல்லாமை, பகிர்வில் குளறுபடிகள் மற்றும் பிரச்சனையின் வீரியத்தை புரிந்து கொண்டு அதைத் தீர்த்திட முன்வராததேயாகும். உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்த இந்தியாவில் 33 கோடிப் பேர் பசியால் வாடும் நிலையில் போதுமான சேமிப்பு வசதியில்லாததால் ஆண்டிற்கு ஒரு கோடியே 69 லட்சம் டன் உணவு தானியம் வீணாவதாக இந்திய உணவுக்கழகம் தெரிவிக்கிறது. சுதந்திரமடைந்து 63 ஆண்டுகளான பின்பும் போதுமான சேமிப்புக் கிடங்கு வசதிகளில்லை. இந்திய உணவுக்கழகத்தால் இதுவரை 6 கோடியே 50 இலட்சம் டன் உணவு தானியங்கள் கொள்முதல் செய்யப்பட்டாலும் இக்கழகத்தின் சேமிப்பு வசதி இரண்டு கோடியே ஐம்பது இலட்சம் மட்டுமே. இதர உணவு தானியங்கள் ஆங்காங்கே திறந்தவெளிகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இதனால் விரைவில் கெட்டுப் போகக்கூடிய சூழ்நிலை உருவாகிறது.
உணவின்றி ஒருபக்கம் மக்கள் வாடுகையில் உணவு பாதுகாப்பின்றி கெட்டுப்போகக் கூடிய நிலையும் உள்ளது. இதைத்தான் உச்சநீதிமன்றம் கடுமையாகக் கண்டித்து உணவுப்பொருள் ஏதும் வீணாகக் கூடாது, உடனடியாக இதனை பசியால் வாடுவோருக்கு வழங்கிட வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளது. அதே நேரத்தில் நீதிபதி வாத்வா கமிட்டி அறிக்கையின்படி பொது விநியோகத்திட்டத்தில் மிகப்பெரிய ஊழல் மற்றும் திருட்டுகள் நடைபெறுகின்றன. எனவே பொது விநியோகத் திட்டத்தை முழுமையாக கணிணிமயமாக்கிடல் வேண்டுமெனவும் குறிப்பிடுகிறது. அரசு வழங்கும் உணவுப்பொருட்களில் கால்பங்குதான் உரிய மக்களைச் சென்றடைகிறது என்றும், மோசடி திருட்டு இல்லாத வகையில் உணவு விநியோக முறையை மறுசீரமைத்திட வேண்டுமெனவும் நிதி அமைச்சரின் தலைமைப் பொருள்இயல் ஆலோசகர் Dr.கௌசிக் பாசு குறிப்பிடுகிறார்.
உணவுப்பாதுகாப்பு மசோதா தயாரிப்புப் நிலையிலிருக்கக்கூடிய காலகட்டத்தில் பல்வேறு விசயங்களை கணக்கில் கொள்ள வேண்டியுள்ளது. இந்தியாவில் உணவு ஓர் பிரச்சனையல்ல. அதே நேரத்தில் பணமும் பிரச்சனையல்ல. ஆனால் யாருக்கு எவ்வளவு செலவு செய்வது என ஒதுக்கீடு செய்வதில் தான் பிரச்சனை. மூத்த பத்திரிக்கையாளர் சாய்நாத் குறிப்பிடுகிறார், "இந்தியாவில் விமானத்தளம் அமைத்திட 10,000 கோடி ரூபாயும். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்காக 60,000 கோடி ரூபாயும், பெரிய பெரிய நிறுவனங்களுக்கு ஊக்கத் தொகை என்ற பெயரில் மான்யமாக 5,00,000 கோடி ரூபாயும் வழங்க முடிகிறது. ஆனால் பொது விநியோகத்திட்டத்திற்காக 84,399 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்ய முடியாதா" என கேள்வி எழுப்புகிறார். ஏனெனில் இந்தியா முழுவதுமுள்ள அனைவருக்கும் கிலோ ரூ.3ல் பொது விநியோகத்திட்டத்தில் உணவு வழங்கிட அதுவே போதுமானதாகுமென பொருள்இயல் வல்லுநர்கள் பிரவின் ஜா மற்றும் N.ஆச்சார்யா ஆகியோர் குறிப்பிடுகின்றனர்.
சுதந்திர இந்தியாவில் 1952ல் சமுதாய வளர்ச்சி வட்டாரங்கள் என துவங்கப்பட்டு முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி காலத்தில் வறுமையை ஒழிப்போம் என்ற பெயரில் நடைமுறைப்படுத்தப்பட்ட பல்வேறு தனிநபர் பயனளிப்பு சார்ந்த திட்டங்கள் மூலம் வறுமையும், பசியும் குறைந்து வந்தது. ஆனால் இன்றைக்கு புதிய பொருளாதாரக் கொள்கை காரணமாக தனிநபர் பயனளிப்புத்திட்டங்கள் முழுவதும் ஒழிக்கப்பட்டுவிட்டதும் கூட வறுமை உயரக்காரணமானது. அதேபோன்று இந்தியா ஓர் விவசாய நாடு. இதில் சிறுகுறு விவசாயிகளுக்கு போதுமான பாதுகாப்பு வழங்கப்படாததாலும், அவர்கள் விவசாயம் பொய்த்துப்போகும் காலகட்டத்தில் விவசாயிகள் என்ற நிலையிலிருந்து விவசாயக் கூலிகள் அல்லது கட்டிட கட்டுமானக் கூலிகள் என்ற நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இந்தியாவில் இரசாயன உரங்கள் உபயோகத்தின் காரணமாக வளமான, நிரந்தர நீர்பாசன வசதி கொண்ட ஏறத்தாழ 20 மில்லியன் ஹெக்டேர் நிலங்கள் உற்பத்தித்திறனை இழந்துள்ளதென்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதுபோன்றே இந்திய கிராம விவசாயிகளுக்கு போதுமான சாலை வசதிகள், போக்குவரத்து வசதிகள் இல்லாததால் 20 சதவீதம் முதல் 30 சதவீதமான உணவு தான்யங்களும். காய்கறிகளும் விளை நிலங்களிலிருந்து சந்தைக்கு வருவதற்கு முன்பே வீணாகிறது. இவை தடுக்கப்பட்டால் இந்தியாவின் உணவு உற்பத்தி 250 மில்லியன் டன்னையும் தாண்டுமென ஆய்வு விவரங்கள் தெரிவிக்கின்றன.
எனவே 50% மேல் விவசாய நிலங்களைக் கொண்ட கிராமங்களை ஒன்றிணைத்து விவசாயப் பொருளாதார மண்டலங்கள் உருவாக்கப்படல் வேண்டும். தங்க நாற்கரச் சாலைத்திட்டத்திற்கு அளிக்கும் முக்கியத்துவம் அளித்து இக்கிராமங்களின் விவசாய நிலங்களில் முறையான சாலை வசதிகளை அளித்திடல் வேண்டும். இம்மண்டலத்திற்குட்பட்ட விவசாயிகளுக்கு உற்பத்திக் கடன்கள் 4% வட்டியில் தாராளமாக வழங்கப்படல் வேண்டும். இம்மண்டலங்களில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து விளைபொருட்களையும் பாதுகாத்திடத் தேவையான பாதுகாப்பு கிட்டங்கிகள் உருவாக்கப்படல் வேண்டும். இதன் மூலம் உற்பத்தி உயர்ந்து இந்தியாவின் விவசாய வருமானம் 4%லிருந்து உயருவதற்கு வழி வகுக்கும்.
தீர்விற்கான வழி:
* பொது விநியோகத்திட்டத்தை விரிவுபடுத்தி உணவுப்பொருள்கள் அனைத்தும் தங்குதடையின்றி எந்தவித கட்டுப்பாட்டின்றி வழங்குவது.
* ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டும் இருந்தாலும் உணவுப்பொருள் வழங்குவது.
* குடும்ப நபர் எண்ணிக்கைக்கு இணங்க அதன் மடங்குகளில் உணவுப்பொருள் வழங்குவது.
* இந்தியா விவசாயிகள் அனைவருக்கும் 4 சதவீத வட்டியில் அனைத்து செயல்களுக்கும் (விதை, அறுவடை விற்பனை) எவ்வித கட்டுப்பாடுகளுமின்றி வங்கிக் கடன் வழங்குதல்.
* போதுமான சேமிப்புக் கிட்டங்கிகளை ஏற்படுத்தி உணவுப்பொருட்கள் வீணாவதை முழுவதுமாகத் தடுத்து நிறுத்துவது.
* உணவுப்பொருட்களை விவசாயிகளே உழவர் சந்தை போல் நேரடியாக விற்பனை செய்திட ஏற்பாடு செய்திடுதல்.
* பொது விநியோகத் திட்டத்திற்கு போதுமான நிதி ஒதுக்கி அதனை முழுமையாகத் தன்னிச்சையாகச் செயல்பட அனுமதிப்பது, அதில் ஊழல் செய்பவர், தடை ஏற்படுத்துவோருக்கு கடுமையான தண்டனைகள் வழங்குவது.
* விவசாயப் பொருட்களை மாற்றம் செய்யப்பட்ட- மதிப்பு கூட்டிய நிலையில் விற்பனை செய்திட விவசாயிகளுக்கு பயிற்சியளித்தல்.
* இவை இந்திய விவசாய வளர்ச்சியை 4%லிருந்து 10% உயர்த்துவதோடு மட்டுமல்லாமல் விவசாயத்தையே நம்பியிருக்கக்கூடிய 75% மக்களைக் கொண்ட இந்திய மக்களின் வறுமையையும் பசியையும் நீக்கும்.

நன்றி: கீற்று