mercredi 15 janvier 2014

நல்ல சேதி சொல்லும் நாஸ்டர்டாம்

நல்ல சேதி சொல்லும் நாஸ்டர்டாம்



உலகில் எப்போது, என்ன நடக்கப் போகிறது என்று பல சம்பவங்களை மிக துல்லியமாக கணித்து பல ஆண்டுகளுக்கு முன்பே சொன்னவர் மிகேல் டி நாஸ்டர்டாம். பிரான்சின் புரோவென்ஸ் பகுதியை சேர்ந்தவர். 1503,ல் பிறந்து 1566,ல் இறந்தவர். எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், வைத்தியர், வானியல் நிபுணர் என்று பல முகங்கள் கொண்டவர். கிரக நிலைகளை கூட்டிக் கழித்து ஜோதிடம் சொல்பவர். சிம்பிளாக பிரான்ஸ் சித்தர். உலகில் எதிர்காலத்தில் இதெல்லாம் நடக்கப் போகிறது என்று கூறி 4 வரி செய்யுள் வடிவில் அவர் வெளியிட்ட கருத்துகள் 1550,களில் தொகுப்பு புத்தகங்களாக தொடர்ந்து வெளியானது. ‘இது ஜோதிடத்தின் தீர்ப்பு’ என்று கூறி திட்டவட்டமாக அவர் வெளியிட்ட கருத்துகள் மக்கள் மத்தியில் வரவேற்பை மட்டுமின்றி எதிர்ப்பையும் ஏற்படுத்தியது. சின்னதும் பெரியதுமாக 6 ஆயிரத்துக்கும் அதிகமான ஆரூடங்களை அவர் கூறியுள்ளார். ‘உலக மையத்தில் வெடிக்கும் தீ, நியூ சிட்டியில் அதிர்ச்சியை ஏற்படுத்தும், வானுயர்ந்த இரு பாறைகள் தகர்க்கப்படுவது மாபெரும் போரை ஏற்படுத்தும்’ என்பது போன்ற வரிகளுடன் அவர் கூறியிருந்தது நியூயார்க் இரட்டை கோபுர தகர்ப்பு சம்பவத்தை பற்றியதுதான் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். அமெரிக்க முன்னாள் அதிபர் கென்னடி சுட்டு கொல்லப்பட்டது, அவரது மகன் ஜூனியர் கென்னடி விமான விபத்தில் பலியானது, இங்கிலாந்து இளவரசி டயானா கார் விபத்தில் மரணம் அடைந்தது, 1986,ல் சேலஞ்சர் விண்கலம் வெடித்து சிதறியது, ஜப்பான் அணுகுண்டு வீச்சு, ஹிட்லர் பிறப்பு ஆகியவை குறித்தும் நாஸ்டர்டாமின் ஆரூட செய்யுள்களில் குறிப்பு காணப்படுவதாக கூறுகின்றனர். ஒரு மகிழ்ச்சியான சமாசாரம்.. ‘‘என் கணிப்பு இன்றில் இருந்து 3797 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும்’’ என்று நாஸ்டர்டாம் கூறியிருக்கிறார். அவர் இதை சொன்னது 1555,ம் ஆண்டில். எனவே, அவரது கணக்கின்படி உலகம் அழிவு 2012,ல் இல்லை என்பதுதான் என்கின்றனர் நாஸ்டர்டாம் நம்பிக்கையாளர்கள். அப்போதும் இதேபோல உலகம் இன்னொரு முறை பரபரப்பாகி அழிவு பற்றி விவாதிக்கும்

Aucun commentaire:

Enregistrer un commentaire

ANY ERROR SHOULD BE INFORMED BY EMAIL